” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ஐயோ வெள்ளம் கொண்டு போயிட்டா என்ட மச்சானை

வஜிதா முஹம்மட்்

ஐயோ வெள்ளம் கொண்டு போயிட்டா
என்ட மச்சானை

வானம் பிளந்து மழையும்
கொட்டுது

வயல் வரம்பும் நிரம்பி
ஊரே தள்ளி அடிச்சி நிற்கிது

உள்ளூர் ஏரி நிரம்பி வயல்வரம்பு
காணாமல் போனது

கடலும் ஆறும் காதல் கொண்டு
கலவை செய்யுது
கரைபுரண்டு மீீன்களெல்லாம்
கரையில் துள்ளுது

வேல வெட்டியின்றி வீட்டில்
கிடந்த என்ட மச்சான்

சும்மா இ௫ந்தவர உசிப்பேத்தி
ஊரச்சுத்தி வெள்ளம் பார்க்க

பக்கத்து வீட்டுக்காரன் தோணிகட்டி
ஜோடி போட்டு கூட்டிப்போனான்

தோல் மேல கைபோட்டு
சோக்கா போனாங்க ஓடி

வாகனேரி …மீயாங்குளக்கட்டுடைச்சி
வாய்க்காலுக்குள் தோணியுடைஞ்சி

மாச்சான் போன தோணிகவிழ்ந்து
காணமல் போனது தண்ணிக்குள்ளே
மறைச்சி

மூன்று நாளாத் தேடி
முற்படையும் அங்கு கூடி

என்ட தங்க மச்சானக் காணவில்ல
போடி
அவங்க போன தோணிய மட்டும்
இழுத்து வந்தாங்க ஊரே கூடி

ஆறு ஏழு புள்ளையோட
நடுத்தெ௫வில்ல நிற்கிறேன் பா௫

தாயையும் இந்தக் குட்டி கு௫மானப்
பெறுப்பு எடுப்பார் யா௫

பாரத்தை எல்லாம் என்ட தலையில
ஏற்றி விட்டு
வெள்ளத்தில வெடுக்கென்று
போய்விட்டிங்க தங்க மச்சான்

நல்ல தங்கால்போல நானும் வர
பாத்தேன்் மச்சான்
வெள்ளம் வடிஞ்சி வெள்ள நிவாரணம்
கொடுக்காங்க தங்க மச்சான்

அந்த லைனில நம்ம அர டசினுடன்
நிற்கேன்் என்ட தங்க மச்சான்

[௨ங்க ஊரின்் உண்மைச் நிகழ்வு
நிறையப் பெண்கள் விதவையானார்கள்்]

வஜிதா முஹம்மட்்

Nada Mohan
Author: Nada Mohan