” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

மொழி

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏
வியாழன் கவிதை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-43
05-12-2024

மொழி

உலக மொழிகளுள் மூத்தவளே
முச்சங்கம் வளர்த்தவள் நீயல்லவா
தேனினும் இனிய செம்மொழியே
தெவிட்டாமல் நாவுரைக்கும் எம் மொழியே!

வண்ணப் பாட்டு எடுத்து
வாஞ்சையோடு கதை தொடுத்து
அருமையான கவி கிறுக்கி
அகம் குளிர நிற்கின்றேன்!

கண்ணினென் தமிழ்மொழியே
கண்ணாய் உனைப் போற்றி
திசை எட்டும் பரவி வர
திகட்டாமல் இயம்பி நிற்ப்பேன்.

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Nada Mohan
Author: Nada Mohan