29
Jul
ராணி சம்பந்தர்
பரிதவிக்கும் நேரம்
புரிந்துணர்வுடனே
கை கொடுப்பாரே
உறங்க மறுத்த விழியை
ஊக்கமிட்டு உரமூட்டித்
தாகந் தீர்க்கும் தோழரே
நடமாடும் மனிதர்...
29
Jul
30.07.2026 “நட்பென்றாலே”2043 ஜெயா நடேசன்
நட்பு என்பது மலரைப்போல அல்ல
ஒரு நாளில் பூத்து குலுங்கி உதிரும்
வானில் தோன்றும் நட்சத்திரம்
வானம்...
29
Jul
(திருத்தம் ) நட்பென்றாலே 30.07.2026
நட்பென்றாலே (772 )செல்வி நித்தியானந்தன்
அன்பு அரவணைப்பு
என்றும் கைகொடுப்பு
ஆபத்தில் அறிந்து
துணையாகும் சிறப்பு
அகிலத்தில் நட்பு
நல்லதொரு...
மதிமகன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 289
10/12/2024 செவ்வாய்
“ஈரம்”
———
நெஞ்சில் ஈரமின்றி,
நேர்மை ஏதுமின்றி,
வஞ்சகம் செய்வாரடி- மகளே!
வருந்தார் எப்போதுமடி!
அச்சம் எதுவுமின்றி,
ஆணவக் குறைவுமின்றி,
பச்சையாய் செய்வாரடி-மகளே!
பண்படாத மனிதரடி!
நச்சு நச்சென்று……..
நாள்முழுதும் குறைசொல்லி,
நச்சரிப் பாரடி- மகளே!
நன்மையேதும் செய்யாரடி!
துச்சமாய் எடுத்தெறிந்து,
“தூசு நீ” என்று சொல்லி,
எச்சில் உமிழ்வாரடி-மகளே!
ஏளனமும் செய்வாரடி!
பேச்சில் இனிமையின்றி,
பேதலிக்கும் குணமுமின்றி,
கூச்சமும் காட்டாரடி-மகளே!
கும்மியடிக்கும் மனிதரடி!
இச்சை கொள்வாரடி..
இம்சையும் செய்வாரடி..
குச்சென்றும் பாராரடி-மகளே!
குனிந்தும் செல்வாரடி!
நன்றி
மதிமகன்
Author: Nada Mohan
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...
20
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
21-07-2026.
அமைதி கலைந்த தனிமையில்
அழகிய அந்திப் பொழுதினில்
இதயம் வருடும்...