03
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
03-07-2025
வர்ண வர்ணப் பூக்கள்
வாசம் மிகுந்த பூக்கள்
கண்ணில் காண குளிர்ச்சி...
03
Jul
வர்ண வர்ண பூக்களே!
நகுலா சிவநாதன்
வர்ண வர்ண பூக்களே!
புதுமை படைக்கும் நற்பூக்கள்
புனிதம் நிறைக்கும் நன்மலர்கள்!
அழகு வண்ண நிறமுடனே!
அழகாய்...
02
Jul
வண்ண வண்ணப் பூக்கள்…..
ரஜனி அன்ரன் (B.A) “ வண்ண வண்ணப் பூக்கள் “ 03.07.2025
பூமித்தாயின்...
மதிமகன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 289
10/12/2024 செவ்வாய்
“ஈரம்”
———
நெஞ்சில் ஈரமின்றி,
நேர்மை ஏதுமின்றி,
வஞ்சகம் செய்வாரடி- மகளே!
வருந்தார் எப்போதுமடி!
அச்சம் எதுவுமின்றி,
ஆணவக் குறைவுமின்றி,
பச்சையாய் செய்வாரடி-மகளே!
பண்படாத மனிதரடி!
நச்சு நச்சென்று……..
நாள்முழுதும் குறைசொல்லி,
நச்சரிப் பாரடி- மகளே!
நன்மையேதும் செய்யாரடி!
துச்சமாய் எடுத்தெறிந்து,
“தூசு நீ” என்று சொல்லி,
எச்சில் உமிழ்வாரடி-மகளே!
ஏளனமும் செய்வாரடி!
பேச்சில் இனிமையின்றி,
பேதலிக்கும் குணமுமின்றி,
கூச்சமும் காட்டாரடி-மகளே!
கும்மியடிக்கும் மனிதரடி!
இச்சை கொள்வாரடி..
இம்சையும் செய்வாரடி..
குச்சென்றும் பாராரடி-மகளே!
குனிந்தும் செல்வாரடி!
நன்றி
மதிமகன்

Author: Nada Mohan
01
Jul
வணக்கம்
போர்க்கோலம் ...
கண்டங்கள் எங்கும் கதிகலங்கிட
துண்டங்களாகி உடலங்கள் வீழ்ந்திட
எங்குமே போர்க்கோலம் பூணுது ...
01
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-07-2025
இயற்கை அழிவு ஒருபக்கம்
இனக்கலவரம் மறுபக்கம்
தியாகத்தின் விதை சரித்திரமாகி
தாயகக்கனவு கலைந்த கதையிது…
சேவல்...
29
Jun
ராணி சம்பந்தர்
காலஞ் செய்யும் கோலம்
வால் கொய்யும் வல்லரசின்
நாசகார வேலையில் சிக்கி
முக்கித் தவிக்கும் அப்பாவிகள்
மெல்ல...