” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 289
10/12/2024 செவ்வாய்
“ஈரம்”
———
நெஞ்சில் ஈரமின்றி,
நேர்மை ஏதுமின்றி,
வஞ்சகம் செய்வாரடி- மகளே!
வருந்தார் எப்போதுமடி!

அச்சம் எதுவுமின்றி,
ஆணவக் குறைவுமின்றி,
பச்சையாய் செய்வாரடி-மகளே!
பண்படாத மனிதரடி!

நச்சு நச்சென்று……..
நாள்முழுதும் குறைசொல்லி,
நச்சரிப் பாரடி- மகளே!
நன்மையேதும் செய்யாரடி!

துச்சமாய் எடுத்தெறிந்து,
“தூசு நீ” என்று சொல்லி,
எச்சில் உமிழ்வாரடி-மகளே!
ஏளனமும் செய்வாரடி!

பேச்சில் இனிமையின்றி,
பேதலிக்கும் குணமுமின்றி,
கூச்சமும் காட்டாரடி-மகளே!
கும்மியடிக்கும் மனிதரடி!

இச்சை கொள்வாரடி..
இம்சையும் செய்வாரடி..
குச்சென்றும் பாராரடி-மகளே!
குனிந்தும் செல்வாரடி!
நன்றி
மதிமகன்

Nada Mohan
Author: Nada Mohan