இப்போதெல்லாம் இது எங்கே

சுமித்ரா தேவி

இப்போதெல்லாம் இது எங்கே

பறவையின் சத்தம்
பாட்டியின் உணவு
கபடி விளையாட்டு
கள்ளம் இல்லா மனிதன்
பக்கத்து வீட்டு பாசம்
பனை மர நிழல்
பார்த்ததும் பழகும் குழந்தை
பாவாடை தாவணி குமரி
ஆற்றில் குளியல்
அத்தையின் அரவணைப்பு
மாமாவின் விடுமுறை வருகை
விழாக்கால வித்தைகள்
எல்லாம் மறந்து போனது
நினைக்கும் போது ஏனோ
கண்ணில் ஒரு துளி நீர்
மோ.சுமித்ரா தேவி
கொழும்பு
இலங்கை

Nada Mohan
Author: Nada Mohan

சிவரூபன் சர்வேஸ்வரி செந்தூரப்பூவே ஃஃஃஃஃஃஃஃஃஃஃ செந்தூரப்பூவே செங்காந்தள் விழியே வருவாயே// மந்தாரம் கொட்டும் மாசில்லாத வீணையிலே// ஒய்யாரமாக ...

Continue reading