இதெல்லாம் இப்போ எங்கே ?

ரஜனி அன்ரன்

“ இதெல்லாம் இப்போ எங்கே ? கவி….ரஜனி அன்ரன் (B.A) 12.12.2024

உலகம் முழுவதும்
உரிமைக் குரல் ஓங்கி ஒலிக்குது
எங்கே எங்கே மனித உரிமையென்று
எங்கும் தேடி அலையுது
மனித உரிமை மீறல்களே
மன்னுலகை ஆளுது
அன்பு சமத்துவம் நீதியெல்லாம்
அறவே செத்துப் போச்சுது !

மூன்றாம் உலக யுத்தமொன்று
முழுமூச்சாய் தொடருது
மொத்த உலகும் கூடி நின்று
வேடிக்கை தான் பார்க்குது
கொலையும் களவும் பொய்யும் புரட்டும்
மலிந்து தான் போச்சுது
நீதிதேவதையோ மண்டியிட்டுக் கிடக்குது
அநீதிகள் தான் தலைவிரித்து ஆடுது !

அன்பில்லை பாசமில்லை பந்தமில்லை இப்போ
அத்தனையும் வேசம் தான் இப்போ
மதமென்றும் பேதமென்றும்
மானிடமே அலையுது
மனிதஉரிமை என்ற பெயரில் – இப்போ
புதிய யுகமொன்றைத் தேடுது !

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மூதாதையரில் முழங்கியது முழங்கியவரில் புழுங்கியது புழுங்கியவரில் பூ பூத்துக் குலுங்கிய மொழியே தமிழ் பெற்றோர் தினம் பேசியது உற்றார்...

Continue reading