சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

இதெல்லாம் இப்போ எங்கே ?

ரஜனி அன்ரன்

“ இதெல்லாம் இப்போ எங்கே ? கவி….ரஜனி அன்ரன் (B.A) 12.12.2024

உலகம் முழுவதும்
உரிமைக் குரல் ஓங்கி ஒலிக்குது
எங்கே எங்கே மனித உரிமையென்று
எங்கும் தேடி அலையுது
மனித உரிமை மீறல்களே
மன்னுலகை ஆளுது
அன்பு சமத்துவம் நீதியெல்லாம்
அறவே செத்துப் போச்சுது !

மூன்றாம் உலக யுத்தமொன்று
முழுமூச்சாய் தொடருது
மொத்த உலகும் கூடி நின்று
வேடிக்கை தான் பார்க்குது
கொலையும் களவும் பொய்யும் புரட்டும்
மலிந்து தான் போச்சுது
நீதிதேவதையோ மண்டியிட்டுக் கிடக்குது
அநீதிகள் தான் தலைவிரித்து ஆடுது !

அன்பில்லை பாசமில்லை பந்தமில்லை இப்போ
அத்தனையும் வேசம் தான் இப்போ
மதமென்றும் பேதமென்றும்
மானிடமே அலையுது
மனிதஉரிமை என்ற பெயரில் – இப்போ
புதிய யுகமொன்றைத் தேடுது !

Nada Mohan
Author: Nada Mohan