“அன்பெனும் அகராதி”…

சிவதர்சனி இரா

வியாழன் கவிதை நேரம்
கவி இலக்கம்- 2075!

அன்பெனும் அகராதி..

அழகழகான பக்கங்கள்
ஆழுமை நிறை பதிவுகள்
கூடிக் கழிக்கும் எழில்கள்
குன்றென நிமிரும் பண்புகள்

கரங்கோர்த்து ஆற்றுப்படுத்தும்
கண்ணீர் வரின் துடைத்துவிடும்
ஈவது சிறப்பென உணர்த்திவிடும்
இல்லாமை போக்க உதவிவிடும்

பெருமை பாராட்டாது இது
பெற்றவர் போல் கூடவே வரும்
விழும்போது கைப்பிடித்து எழ
விசை கொண்டு அமைதி பேணுமே

வயது பேதமை இதற்கில்லை
வறுமை செல்வம் பிரிவுமில்லை
இறுமாப்பு கொண்டு அலைவதில்லை
உறுதியாய் நிலைக்குமே பண்பிலே..
சிவதர்சனி இராகவன்
18/12/2024

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மூதாதையரில் முழங்கியது முழங்கியவரில் புழுங்கியது புழுங்கியவரில் பூ பூத்துக் குலுங்கிய மொழியே தமிழ் பெற்றோர் தினம் பேசியது உற்றார்...

Continue reading