” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

“அன்பெனும் அகராதி”…

சிவதர்சனி இரா

வியாழன் கவிதை நேரம்
கவி இலக்கம்- 2075!

அன்பெனும் அகராதி..

அழகழகான பக்கங்கள்
ஆழுமை நிறை பதிவுகள்
கூடிக் கழிக்கும் எழில்கள்
குன்றென நிமிரும் பண்புகள்

கரங்கோர்த்து ஆற்றுப்படுத்தும்
கண்ணீர் வரின் துடைத்துவிடும்
ஈவது சிறப்பென உணர்த்திவிடும்
இல்லாமை போக்க உதவிவிடும்

பெருமை பாராட்டாது இது
பெற்றவர் போல் கூடவே வரும்
விழும்போது கைப்பிடித்து எழ
விசை கொண்டு அமைதி பேணுமே

வயது பேதமை இதற்கில்லை
வறுமை செல்வம் பிரிவுமில்லை
இறுமாப்பு கொண்டு அலைவதில்லை
உறுதியாய் நிலைக்குமே பண்பிலே..
சிவதர்சனி இராகவன்
18/12/2024

Nada Mohan
Author: Nada Mohan