பாரதியைத்தேடினேன்……..

இரா.விஜயகௌரி

உரிமைக குரல் தொடுத்து
உள்ளக்கமலம் தொட்டு
திண்ணிய மொழி துளைத்து
தீர்க்கமாய். கவிதை தந்தான்

நாணிடா நிமிர்ந்தெழுந்து
நம் மாதர் தம் நிலை விழிக்க
வேழமாய் முழங்கி நின்றான் குரல்
வேங்கையாய். சீறிப் பாய்ந்தான்

வறுமையின் சிறைப்பிடிக்குள்-அவன்
சொற்கள் வசப்பட்டு தொலையவில்லை
மீறியே எழுந்து செப்பி-எங்கள்
உதிரத்துள் தமிழ் வரைந்தான்

மனையவள் தோளணைத்து-வாழ்வு
இனிமைக்கும் இசை பொழிந்தான்-ஆங்கு
செழுமையை உணரா மாந்தர் முன்னே
சீரினை இழந்து நின்றான்

வேழத்தால் இறக்கவில்லை-ஆங்கே
கை கொடாமாந்தர் தம்மால்
நோயினால் நுடங்கிச் சாய்ந்த
பாரதி எங்கே தேடினேன் தேடினேன்

இன்று கண்டும் காணா மனிதர் நாங்கள்
இங்கு பாரதிகள் தோன்ற மாட்டார்
பச்சோந்தி இனமே நாங்கள்

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மூதாதையரில் முழங்கியது முழங்கியவரில் புழுங்கியது புழுங்கியவரில் பூ பூத்துக் குலுங்கிய மொழியே தமிழ் பெற்றோர் தினம் பேசியது உற்றார்...

Continue reading