பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம் 292

சிறுமை கண்டு பொங்குவாய்

அவன் பெயர் ஒழிக
அவன் ஒரு திருடன்
ஓங்கி ஒலிக்கும் குரல்கள்
ஒத்து ஊதும் மக்கள் !

கை ஏந்தி வாங்கிய
வெள்ள நிவாரணமும்
கரம் கூப்பி சொன்ன
நன்றியும்

கால் போத்தல் சாராயத்துடன்
கைக்குள் வைத்த பணத்துடன்
நா மாறி போய்
பலி போடும் இவர்களை !

நன்றி கேட்ட மாந்தருக்கு
நன்மை செய்வது குற்றமன்றோ !
சிறுமை கொண்ட உள்ளதைக் கண்டு
சீறும் அவன் உள்ள மன்றோ !

குமரன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading