“தாயுமானவர்..”

சிவதர்சனி இரா வியாழன் கவிதை நேரம்..!! கவி-2161 “தாயுமானவர்”.. தாயுக்கும் தாயாகி சேயுக்கும் தாயாகித் தரணியிலே முதலானவர் தந்தை எனும் அற்புதமே.. கருவாகி உருவாகக் காரணி...

Continue reading

போனும் போராட்டமும் 598

Selvi Nithianandan 09.01.2025

போனும் போராட்டமும் (596)

நவீன தொழில் நுட்பத்தின் வளர்ச்சி
நன்றும் தீதும் நம்மிடை உயர்ச்சி
நானில மெங்கும் அபார முயற்ச்சி
நாலா பக்கமும் அதீத பயிற்ச்சி

கைக்குள் நுழையாத பல விந்தை
கற்றலும் காணலும் விற்பனைச் சந்தை
ஆற்றலை தேடலை தெளிவுறும் சிந்தை
ஆடுது வலைக்குள் தேடியே நிந்தை

சிறியவர் பெரியவர் கண்கட்டிய வித்தை
சீற்றமாய் போகுது கணக்கில் கத்தை
காலச் சக்கரத்தில் அழிக்கும் சொத்தை
கண்டும் காணாது தூங்குது மெத்தை

காலத்தின் கடமை கட்டாய நிலைமை
ஞாலத்தின் உறவுகள் நலிவடையும் கீழ்மை
பாலமாய் புதைந்திட்ட வேடத்தின் வலிமை
சீலமாய் சீராய் சிதையா நிலைபெறவே.

Nada Mohan
Author: Nada Mohan