இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 293
28/01/2025 செவ்வாய்
கவியழகு
————-
கரு ஒன்று மலரும்-பின்
கை காலும் முளைக்கும்!
உரு தானே நகரும்-பின்
உணர் வதற்கு தெரியும்!

உள் நின்று துவளும் -தான்
உலா வரத் துடிக்கும்!
சொல் சொல்லாய் சேரும்-பின்
சோர் வின்றித் தொடரும்!

எதுகை மோனை இணையும்
எளிதாய் சந்தமும் சேரும்!
புதிய கற்பனை தோன்றும்-நல்
புத்துணர்வு தானே பிறக்கும்!

காலமும் கனிந்து வரும்- சிசு
கையில் வந்து சேரும்!
கவி தன் பெயரென்றும்-தன்
கவின் இதுவென்றும் கூறும்!

பிரமன் படைப்பதில்-தினம்
பிறப்ப திங்கு உயிர்கள்!
கவிஞன் உழைப்பினில்-உலகு
காண்பது அழகுக் கவிகள்!
நன்றி
மதிமகன்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading