மாறியதே வாழ்வு…

வசந்தா ஜெகதீசன் மாறியதே வாழ்வு... தினம் தினமாய் திசைமாறும் திருப்பங்கள் பலவாகும் ஆறெனும் நதியோட்டம் அனுதினமும் பெருமன்றம் கூறுபடும் குழப்பங்கள் குறுகி வரும்...

Continue reading

உருண்டோடிய பந்து வாகைசூடிய மகிமை

செல்வி நித்தியானந்தன் (771) உருண்டோடிய பந்து வாகைசூடிய மகிமை கோடிக்கணக்கான ரசிகர்களை ஈர்த்தும் கோலாகலமாக...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 293
28/01/2025 செவ்வாய்
கவியழகு
————-
கரு ஒன்று மலரும்-பின்
கை காலும் முளைக்கும்!
உரு தானே நகரும்-பின்
உணர் வதற்கு தெரியும்!

உள் நின்று துவளும் -தான்
உலா வரத் துடிக்கும்!
சொல் சொல்லாய் சேரும்-பின்
சோர் வின்றித் தொடரும்!

எதுகை மோனை இணையும்
எளிதாய் சந்தமும் சேரும்!
புதிய கற்பனை தோன்றும்-நல்
புத்துணர்வு தானே பிறக்கும்!

காலமும் கனிந்து வரும்- சிசு
கையில் வந்து சேரும்!
கவி தன் பெயரென்றும்-தன்
கவின் இதுவென்றும் கூறும்!

பிரமன் படைப்பதில்-தினம்
பிறப்ப திங்கு உயிர்கள்!
கவிஞன் உழைப்பினில்-உலகு
காண்பது அழகுக் கவிகள்!
நன்றி
மதிமகன்

Nada Mohan
Author: Nada Mohan