” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 293
28/01/2025 செவ்வாய்
கவியழகு
————-
கரு ஒன்று மலரும்-பின்
கை காலும் முளைக்கும்!
உரு தானே நகரும்-பின்
உணர் வதற்கு தெரியும்!

உள் நின்று துவளும் -தான்
உலா வரத் துடிக்கும்!
சொல் சொல்லாய் சேரும்-பின்
சோர் வின்றித் தொடரும்!

எதுகை மோனை இணையும்
எளிதாய் சந்தமும் சேரும்!
புதிய கற்பனை தோன்றும்-நல்
புத்துணர்வு தானே பிறக்கும்!

காலமும் கனிந்து வரும்- சிசு
கையில் வந்து சேரும்!
கவி தன் பெயரென்றும்-தன்
கவின் இதுவென்றும் கூறும்!

பிரமன் படைப்பதில்-தினம்
பிறப்ப திங்கு உயிர்கள்!
கவிஞன் உழைப்பினில்-உலகு
காண்பது அழகுக் கவிகள்!
நன்றி
மதிமகன்

Nada Mohan
Author: Nada Mohan