09
Jul
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
09
Jul
நடிப்பு
சக்தி சிறினிசங்கர்
அன்பினைக் காட்டுவர் அசந்திட வைப்பர்
உதட்டிலே சிரிப்பு உள்ளத்திலே கசப்பு
முகத்திலே வெளிச்சம்...
09
Jul
உலகக் கோப்பைத் திருவிழா
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
மதிமகன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்- 295
11/02/2025 செவ்வாய்
“பங்கு நீ”
————-
அழகு நிலா வந்ததென,
அருகில் வந்து நின்றவளே!
பழகு தமிழ் பாவையென
பந்தம் பெருக்க வந்தவளே!
பங்கு நீயென அவன் பகர,
பாங்காய் ஏற்று நின்றவளே!
சிங்கப் பெண் எனப் புகழ,
சிலிர்த்து முகம் சிவந்தவளே!
அண்ணல் அவன் சீதைபோல்,
அன்பு கொண்டு அழைத்தவளே!
எண்ணம் நிறைய நிற்பவளே,
எழில் உருவான பெண்ணவளே!
திருமால் மனைவி திருமகளாய்,
தேவை உணர்ந்து அளிப்பவளே!
அருமை என்றெவர் புகழ்ந்தாலும்,
அடக்கம் கொண்டு மிளிர்பவளே!
சங்கம் வளர்த்த தமிழதுபோல்,
சந்தானம் செழிக்க வைப்பவளே!
பங்கு நீயாய் வாய்த்திடவே-அவன்
பாரினில் செய்த தவமென்ன!
நன்றி
மதிமகன்
Author: Nada Mohan
08
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
நட்பு
நாணயம் தவறாத நல்லநட்பு வேண்டுமடா
பணத்தாசை கொண்டே பாழாக்கும் எண்ணமின்றி
உயிராக இருக்கும் உன்னத...
08
Jul
செல்வி நித்தியானந்தன்
நட்பு
எதிர்பார்பு இன்றியே
எல்லை தாண்டியே
எண்ணற்ற பாசமாய்
ஏங்கிடும் நட்பாய்
வயது மொழி நாடு
பார்க்காத...
24
Jun
செல்வி நித்தியானந்தன் கோடை
கோடை வந்தாலே
கடற்கரை மோகம்
வாடை என்றாலும்
எடுக்குதே தாகம்
ஆடை மாற்றமும்
பலரது தேகம்
ஜாடை காட்டியே
பூக்களின்...