இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்- 295
11/02/2025 செவ்வாய்
“பங்கு நீ”
————-
அழகு நிலா வந்ததென,
அருகில் வந்து நின்றவளே!
பழகு தமிழ் பாவையென
பந்தம் பெருக்க வந்தவளே!

பங்கு நீயென அவன் பகர,
பாங்காய் ஏற்று நின்றவளே!
சிங்கப் பெண் எனப் புகழ,
சிலிர்த்து முகம் சிவந்தவளே!

அண்ணல் அவன் சீதைபோல்,
அன்பு கொண்டு அழைத்தவளே!
எண்ணம் நிறைய நிற்பவளே,
எழில் உருவான பெண்ணவளே!

திருமால் மனைவி திருமகளாய்,
தேவை உணர்ந்து அளிப்பவளே!
அருமை என்றெவர் புகழ்ந்தாலும்,
அடக்கம் கொண்டு மிளிர்பவளே!

சங்கம் வளர்த்த தமிழதுபோல்,
சந்தானம் செழிக்க வைப்பவளே!
பங்கு நீயாய் வாய்த்திடவே-அவன்
பாரினில் செய்த தவமென்ன!
நன்றி
மதிமகன்

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading