16
Apr
இல 83
வீட்டின் காவலன் நாய்
காலை கடிக்காது காசும்
கேட்காது. வாலை...
16
Apr
மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு
-
By
- 0 comments
மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு
ஜம்பூத கொடைசேர்ந்து
அற்புத வரமாக...
16
Apr
” அடையாளத்தின் முகவரி “
ரஜனி அன்ரன் (B.A) " அடையாளத்தின் முகவரி " 16.04.2026
குரலென்பது வெறும்...
மதிமகன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்- 295
11/02/2025 செவ்வாய்
“பங்கு நீ”
————-
அழகு நிலா வந்ததென,
அருகில் வந்து நின்றவளே!
பழகு தமிழ் பாவையென
பந்தம் பெருக்க வந்தவளே!
பங்கு நீயென அவன் பகர,
பாங்காய் ஏற்று நின்றவளே!
சிங்கப் பெண் எனப் புகழ,
சிலிர்த்து முகம் சிவந்தவளே!
அண்ணல் அவன் சீதைபோல்,
அன்பு கொண்டு அழைத்தவளே!
எண்ணம் நிறைய நிற்பவளே,
எழில் உருவான பெண்ணவளே!
திருமால் மனைவி திருமகளாய்,
தேவை உணர்ந்து அளிப்பவளே!
அருமை என்றெவர் புகழ்ந்தாலும்,
அடக்கம் கொண்டு மிளிர்பவளே!
சங்கம் வளர்த்த தமிழதுபோல்,
சந்தானம் செழிக்க வைப்பவளே!
பங்கு நீயாய் வாய்த்திடவே-அவன்
பாரினில் செய்த தவமென்ன!
நன்றி
மதிமகன்
Author: Nada Mohan
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...
19
Apr
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்தம் சிந்து
கவி இல,_229
"வாழ்த்து கவி"
பாமுக பந்தலில்
பார்சுற்றும் தளம்
நாளும் பொழுதும்...