பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 296
18/02/2025 செவ்வாய்
“முகமூடி”
—————
முகமே, அகமதன் கண்ணாடி
மூடி மறைப்பது சரியாமோ!
இகத்தில் இப்படி பலகோடி
இருப்பதை நீயும் அறிவாயோ!

நல்லவர் தாமென முகம் மூடி
நாடெனும் அரங்கு தனிலேறி
அல்லவை செய்யும் ஒருபோது
அகத்திரை கிழியும் அப்போது!

நன்மையும் செய்யுமா முகமூடி
நலமதும் தருமா உனைத்தேடி!
வன்மை செய்வோர் சிலர் கூடி
வரமாய் கொள்வதுஅதை நாடி!

சுயத்தை மறைக்கும் முகமூடி
சுகம் காண்பவன் ஒரு பேடி!
பயத்தை ஊட்டிடும் முகமூடி
பாரில் அழித்திடு இதை தேடி!

வாயை, மூக்கை மறைத்து
வாழ வைத்தது ஓர் கவசம்!
பேய் உயிர்க்கொல்லி அழிந்து
போக வைத்தது முக கவசம்!
நன்றி
“மதிமகன்”

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றம் கண்டிட பலரது இணைப்பு மாறுமோ வேண்டிட சிலரது பிணைப்பு காட்டிடும் ஆர்வமும் கவிதையின் முனைப்பு கண்ணியம் காட்டியே காவிடும்...

    Continue reading