அழகான பூக்கள்…

அழகான பூக்கள்... எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்.... எத்தகையதோ நீண்ட நொடிக்கு நிலைக்காத வாசம்... பாமுகத் தோட்டத்தில் கமகமவென...

Continue reading

மாற்றம் ஒன்றே..

கெங்கா ஸ்டான்லி
மாற்றம் ஒன்றே
—————-
மாறும் உலகில் மாறும் மனிதர்கள்
தேறும் நாளும் தெளிந்த சிந்தையில்
கூறும் போதும் குறையாக விளங்கும்
ஆறுபோல அலைகள் அடிக்கையிலே
ஊடக மாற்றம் ஒலியில் ஏற்றம்
பாடமாக்க் கற்க பலதும் சாற்றும்
ஏடாகூடமாக எழுதும்போது எழுத்துகள் மாறாது
மாடாய் உழைக்கும் தமிழன் வாழ்வில்
பெண்கள் வழியில் பெரிய மாற்றம்
கண்கள் என்று கருதும் போதும்
விண்மீன் போல உயர்ந்து நின்று
விடிவெள்ளி காணும் வியக்கும் வண்ணம்
பெண்களின் சாதனை பெருகும் பொழுது
பெண்ணடிமையும் உறைந்து கிடக்கும்
புதுமைப் பெண்ணாய் மாற்றம் காண
புதியவை நாளும் செய்திடு பெண்ணே!

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading