ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

திருமணமாம்

மதிமகன்
பெற்றோர் பார்த்த திருமணமாம்
பேசிச் செய்த ஒரு மணமாம்
மற்றோரும் அதற்குச் சம்மதமாம்
மணவறையில் தான் அறிமுகமாம்!

வாழப்போவது ஏனோ இருவருமாம்
வழிமுறை வகுப்பது உறவினராம்
ஆளப்போவ தவர் அன்னையராம்
அண்ணியர் சிலரும் அடக்குவராம்

நாட்டிற்கு நாடது வேறுபடுமாம்
நாகரிகம் முன்னேற ஊறு படுமாம்!
பேட்டுக்கு பேடும் சரிவருமாம்
பேதமை என்றால்,நகை வருமாம்!

செயற்கை புத்தி என்ன தருமோ!
செத்தவரை எழுப்பி சேர்த்து விடுமோ!
இயற்கை வழமையும் தகர்ந்து விடுமோ!
இனியும் திருமணம் வாழ்ந்து விடுமோ!

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading