தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

கவிதையெனக் கிறுக்கினேன்(52)…

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
13-03-2025

ஈழமண்ணை இழந்த அப்பாவியாகி
இதயக்கிடக்கைகள் சில எழுத்தாகி
தொலைந்து போன கனவுகள் பலவாகி
தொக்கிநிற்கும் நினைவுகளும் மேலாகி

ஆழ்மனது எண்ணமெல்லாம் கொட்டித்தீர்த்து
அலைபாயும் அருவியாய் ஊற்றெடுக்க
சிறுகதையும் நாடகமும் சிறகடிக்க
சிறுகவிதையும் பட்டிமன்றமும் சிங்காரிக்க

தளமொன்று தந்தவரை தலைவணங்கி
தாழ்வுமினி வேண்டாமென அரங்கேறி
எழுத்தாக புனைந்து அள்ளி எழுதித்தள்ளி கவிதையெனக் கிறுக்கினேன் தமிழேகேள்!

தாய்மண்பற்று தரமாயுண்டு என்னிடமும்
தமிழை ஆழ்ந்து படிக்காவிடினும்
தமிழின் அழகில் மயங்கி நானும்
தலையாய கடமையெனக் காப்பேன்..

Jeba Sri
Author: Jeba Sri

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

Continue reading