கவிதையெனக் கிறுக்கினேன்(52)…

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
13-03-2025

ஈழமண்ணை இழந்த அப்பாவியாகி
இதயக்கிடக்கைகள் சில எழுத்தாகி
தொலைந்து போன கனவுகள் பலவாகி
தொக்கிநிற்கும் நினைவுகளும் மேலாகி

ஆழ்மனது எண்ணமெல்லாம் கொட்டித்தீர்த்து
அலைபாயும் அருவியாய் ஊற்றெடுக்க
சிறுகதையும் நாடகமும் சிறகடிக்க
சிறுகவிதையும் பட்டிமன்றமும் சிங்காரிக்க

தளமொன்று தந்தவரை தலைவணங்கி
தாழ்வுமினி வேண்டாமென அரங்கேறி
எழுத்தாக புனைந்து அள்ளி எழுதித்தள்ளி கவிதையெனக் கிறுக்கினேன் தமிழேகேள்!

தாய்மண்பற்று தரமாயுண்டு என்னிடமும்
தமிழை ஆழ்ந்து படிக்காவிடினும்
தமிழின் அழகில் மயங்கி நானும்
தலையாய கடமையெனக் காப்பேன்..

Jeba Sri
Author: Jeba Sri

ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

Continue reading

செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

Continue reading