கடலின் தாகம்

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

வங்கக் கடலுக்குத் தாகம்
வானம் தொட ஆசையில்
பொங்கிப் பொங்கி உயர
எழுந்திடும் விழி மோகம்

சோகங்கள் சூழும் மேகம்
தாகங்கள் சூறாவளியில்
மொங்கி மொங்கித்
துள்ளும் மழையில்
நனையும் அலை தியாகம்

ஆங்காங்கே மிதந்து சுழலும்
சுறா மீனோ எப்போ விழும்
வானமென வாய் அகன்றிட
இரவு பகல் போராடித்
தள்ளாடும் கடல் கப்பலின்

சாகஷ விளையாட்டுப் பாராது வானமின்னும்
தொடவில்லையே என
உறங்க மறுத்த விழியில்
கடலின் தாகமோ தாகம்.

Nada Mohan
Author: Nada Mohan

ஜெயம் நியதி நடப்பவைதான் நடக்குமென்பது காலதேவன் கணக்கு கடந்துபோகும்  நாட்களெல்லாமதை சொல்லிவிடும் உனக்கு தலைகீழாய் நடப்பினும் நிகழவேணுமென்பதே...

Continue reading

செல்வி நித்தியானந்தன் நியதி காலத்தின் நியதி கட்டாயமாகும் ஞாலத்தின் நியதி மாறுபாடாகும் பாலமாய் நியதி இணைவாகும் கோலமாய் நியதி வேறுபாடாகும் வாழ்வின் சக்கரம் வரமாகும் வீழ்வதும் உயர்வதும் பாடமாகும் விதியின் விளையாடல் எதுவாகும் விடை புரியாதென்பதே இருப்பாகும் மதியின்...

Continue reading