வாழ்த்து கவி

மனோகரி ஜெகதீஸ்வரன்

சந்தம் சிந்தும் சந்திப்பே – நீ
சிந்தும் சந்தம் தித்திப்பே

நீயணிந்திருப்பதோ கவியாரம்
அதுகொடுக்குது ஒய்யாரம்
அதனால் அகலுது மனப்பாரம்

முந்நூறு வாரம்
முடிசூடும் நேரம்
சூட்டுகின்றோம் வாழ்த்தாரம்

வாராவாரம் தலைப்பை தலைப்பை வீசி
தோதான தகவலைக் கவிகளாக வாங்கி
தருகின்றாய் தாராளமாய் செவிக்குணவு
பருகிக் களிக்கின்றது தமிழுறவு
மருவற்று வளர்கின்றது தமிழ்நிலவு

கவிவரிகளைத் தீண்டி கவனமுடன் நோண்டி
பழுதைக் காட்டுகின்றாய் சுட்டி
கவிக்கட்டலை மெருக்கேற்ற

கனகச்சிதமாய் காட்டுகின்றாய் நிறையை
கவியாக்குதிறன் கூட்ட

வாராவாரம் வளர்கின்றோம் பழுதறுத்து

சோராமலே நிற்க்கின்றோம்
கவிதொடுத்து

வேராய் இருப்பவள் நீதானே தாயே
நேராய் நடப்பவளும்
நீதானே தாயே
தமிழுரும் தேரே
சந்தம் சிந்தும் சந்திப்பே
ஊருராய் ஊரும்
உன்ணொளியொலி
பாராள வேண்டும் எந்நாளுமே

வாழ்க வாழ்கவே

Nada Mohan
Author: Nada Mohan

ஜெயம் நியதி நடப்பவைதான் நடக்குமென்பது காலதேவன் கணக்கு கடந்துபோகும்  நாட்களெல்லாமதை சொல்லிவிடும் உனக்கு தலைகீழாய் நடப்பினும் நிகழவேணுமென்பதே...

Continue reading

செல்வி நித்தியானந்தன் நியதி காலத்தின் நியதி கட்டாயமாகும் ஞாலத்தின் நியதி மாறுபாடாகும் பாலமாய் நியதி இணைவாகும் கோலமாய் நியதி வேறுபாடாகும் வாழ்வின் சக்கரம் வரமாகும் வீழ்வதும் உயர்வதும் பாடமாகும் விதியின் விளையாடல் எதுவாகும் விடை புரியாதென்பதே இருப்பாகும் மதியின்...

Continue reading