இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

வரமானதோ வயோதிபம்

நேவிஸ் பிலிப் (கவி 412)

மதியின் முயற்சியால் உயர்ந்தோர்
ஐக்கிய மனப் பான்மை
ஒன்று பட்ட வாழ்வு
புரிந்துணர்வு தன்மை
முனைப்பான இலட்சிய அவா

பதறாமல் காரியமாற்றி
சிதறாமல் கூட்டிச் சேர்த்து
பக்குவமாய் வாழ்ந்த வாழ்க்கை
வரமானதே

சின்னச் சின்ன கதைகள் சொல்லி
பண்பாட்டை மனதில் ஊட்டி
பாட்டியோடு தாத்தாவும் கை கோர்த்து
பிறரோடு இணைந்து வாழும் முறைகள்சொல்லி
வளர்த்த விதம் மறக்கலாமோ.?

சுருங்கிய கண்ணின் பார்வையும்
பல்லில்லா வாயின் சிரிப்பும்
பஞ்சு போல நரைத்த வெண் முடியும்
வயோதிபத்தின் அழகைக் காட்டி நிற்க
அதுவும் எமக்கு வரமானதே.

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading