” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

வரமானதோ வயோதிபம்

நேவிஸ் பிலிப் (கவி 412)

மதியின் முயற்சியால் உயர்ந்தோர்
ஐக்கிய மனப் பான்மை
ஒன்று பட்ட வாழ்வு
புரிந்துணர்வு தன்மை
முனைப்பான இலட்சிய அவா

பதறாமல் காரியமாற்றி
சிதறாமல் கூட்டிச் சேர்த்து
பக்குவமாய் வாழ்ந்த வாழ்க்கை
வரமானதே

சின்னச் சின்ன கதைகள் சொல்லி
பண்பாட்டை மனதில் ஊட்டி
பாட்டியோடு தாத்தாவும் கை கோர்த்து
பிறரோடு இணைந்து வாழும் முறைகள்சொல்லி
வளர்த்த விதம் மறக்கலாமோ.?

சுருங்கிய கண்ணின் பார்வையும்
பல்லில்லா வாயின் சிரிப்பும்
பஞ்சு போல நரைத்த வெண் முடியும்
வயோதிபத்தின் அழகைக் காட்டி நிற்க
அதுவும் எமக்கு வரமானதே.

Nada Mohan
Author: Nada Mohan