” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

வரமானதோ வயோதிபம்..!

சிவதர்சனி இராகவன்
வியாழன் கவி -2125

வரமானதோ வயோதிபம்..!!

வரமானதோ வயோதிபம் அன்றி
உரமானதோ வாழ்வில் அதிகம்
பயிரானதோ விளை நிலத்தில்
பலமானதோ பண்பாடு தழைக்க

மனை யாவிலும் ஒன்று உண்டாம்
புனை காவியம் மிகவும் நன்றாம்
அனுபவம் பகிர்வே சிறப்பாம்
மூத்தோர் வழி காட்டி வரமேயாம்

சொற்கள் ஒவ்வொரு வேதமாம்
சொந்தமே புதிய கீதையாம்
சொரிவது அன்பின் சுகந்தமாம்
வரி வரி முதுமையின் கோலமாம்

வருவது இயற்கை தரு பரிசாம்
வந்த பின் ஓடுவது பயனற்றதாம்
படைப்பின் வினையே உணர்வதாம்
தடையென்ன வயோதியம் இயல்பாம்

முடங்கிட வைத்திட வேண்டாமே
முனைப்பது உயர்த்திட வேண்டுமே
இன்று அவருக்கு நாளை நமக்கு
இதுவே ஏற்பது வரமென ஆவதாம்..
சிவதர்சனி இராகவன்
20/3/2025

Nada Mohan
Author: Nada Mohan