ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

பட்ட மரம்

சடைத்துக் குடையாய்
நிழலிட்டமரம்
சாமரம் வீசிச்
சதிராடிச் சரசரத்தமரம்
முதிர்வு கண்டு
பட்டுவிட்டது இன்று
புடைத்துப் பழுத்த கனிகாய்கள்
தூக்கணாம்குருவிக் கூடுகள் போன்றே
தொங்கியாடும்
புழுக்களும் பதுங்கி வாழும்
அழுகி வீழ்ந்தும் பழங்கள் நாறும்
கல்லெறி பட்டும்
காய்கனிகள் வீழும்
அதுகண்டு படையெடுத்த
பறவைகள் இடம்மாறும்

தங்கும் பறவைகள்
எச்சத்தால் கோலமிடும்
வந்தவர் மனமோ
வசைபாடி ஓலமிடும்
வம்பு வசை வாயாடல்
தெம்பு தந்திடும் உரையாடல்
கம்புச்சண்டை கிட்டி விளையாடல்
முன்பு நடக்கும் எப்போதும்
மூலமிழந்து நிற்கின்றதிது இப்போது

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading