இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

மனமா அறிவா அறிவாய் மனமே?!!

சிவதர்சனி இராகவன்
வியாழன் கவி 2129

மனமா அறிவா?
அறிவாய் மனமே!!

அதிகமாய்க் காயம் பட்டும்
அதற்கே புரிவதில்லை
இதுதான் விதியோ என்றால்
இதற்கு விளக்கம் இல்லை
இறப்பு மலிந்த மண்ணில்
இதயத்திக்கு மதிப்பு இல்லை
மனமோ அறிவோ என்றால்
மயக்கம் அதிலும் உண்டாம்..

எத்தனை விளக்கம் இங்கே
விளக்கியும் பயனோ இல்லை
மனதுக்கு புரிந்த போதும்
அறிவோ ஏற்பதும் இல்லை
அறிவால் அறிந்த போதும்
மனது சமாதானம் ஆவது இல்லை..

அறிவால் செயல் ஆற்றின்
மயக்கம் இங்கே இல்லை
அகத்தால் பார்க்கும் போது
அறிவுக்கோ வேலை இல்லை
எத்தனை சொல்லியும் கேளா
மனதினுக்கு துயரே மிச்சம்
இதுவும் கடந்தே போகும்
இனி அதுவே மருந்தும் ஆகும்..
சிவதர்சனி இராகவன்
27/3/2025

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading