கனவுப் பயணம்

சக்தி சிறினிசங்கர் விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம் வழிநெடுக வயல்வெளிகள் வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து கண்களைக்...

Continue reading

கனவுப்பயணம்……

ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026 கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து எண்ணங்களின்...

Continue reading

மனமா அறிவா அறிவாய் மனமே?!!

சிவதர்சனி இராகவன்
வியாழன் கவி 2129

மனமா அறிவா?
அறிவாய் மனமே!!

அதிகமாய்க் காயம் பட்டும்
அதற்கே புரிவதில்லை
இதுதான் விதியோ என்றால்
இதற்கு விளக்கம் இல்லை
இறப்பு மலிந்த மண்ணில்
இதயத்திக்கு மதிப்பு இல்லை
மனமோ அறிவோ என்றால்
மயக்கம் அதிலும் உண்டாம்..

எத்தனை விளக்கம் இங்கே
விளக்கியும் பயனோ இல்லை
மனதுக்கு புரிந்த போதும்
அறிவோ ஏற்பதும் இல்லை
அறிவால் அறிந்த போதும்
மனது சமாதானம் ஆவது இல்லை..

அறிவால் செயல் ஆற்றின்
மயக்கம் இங்கே இல்லை
அகத்தால் பார்க்கும் போது
அறிவுக்கோ வேலை இல்லை
எத்தனை சொல்லியும் கேளா
மனதினுக்கு துயரே மிச்சம்
இதுவும் கடந்தே போகும்
இனி அதுவே மருந்தும் ஆகும்..
சிவதர்சனி இராகவன்
27/3/2025

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading