முதுமை

மனோகரி ஜெதீஸ்வரன்

முதுமை காணும் முன்னே
மூச்சை விடுபவர் பலரே
முதுமை கண்டு வாழ்பவர் சிலரே

முதுமை என்பதும் வரமே
அதுவும் ஒருவகைத் தவமே

வந்திடும் முதுமை
தந்திடும் பழுதை
ஏந்திடத்தான் வேண்டும் பழுவை

நொந்து அழுதால்
நோவு கழறுமோ
சந்துபொந்து புகுந்து
சுழன்று வந்து
சாந்தி தந்திடுமோ சாவு

வில்லென முதுகு வளைந்தால்
பொல்லை ஊன்று
சொல்லும் பல்லும் சிதைந்தால்
பொய்ப்பல்லைக் காவு
தொல்லைதரும் நோயை
எல்லையிட்டு விரட்டு
அதிகாலையிலே பாயைச் சுருட்டு
தீங்கில்லா வாழ்வை
தியானத்தால் நிகழ்த்து

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading