28
May
” கதிரும் தமிழும் “
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
மனோகரி ஜெதீஸ்வரன்
முதுமை காணும் முன்னே
மூச்சை விடுபவர் பலரே
முதுமை கண்டு வாழ்பவர் சிலரே
முதுமை என்பதும் வரமே
அதுவும் ஒருவகைத் தவமே
வந்திடும் முதுமை
தந்திடும் பழுதை
ஏந்திடத்தான் வேண்டும் பழுவை
நொந்து அழுதால்
நோவு கழறுமோ
சந்துபொந்து புகுந்து
சுழன்று வந்து
சாந்தி தந்திடுமோ சாவு
வில்லென முதுகு வளைந்தால்
பொல்லை ஊன்று
சொல்லும் பல்லும் சிதைந்தால்
பொய்ப்பல்லைக் காவு
தொல்லைதரும் நோயை
எல்லையிட்டு விரட்டு
அதிகாலையிலே பாயைச் சுருட்டு
தீங்கில்லா வாழ்வை
தியானத்தால் நிகழ்த்து
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.