புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-04-2025

புத்தாண்டே வா
புதுமை பொலிவுடனே
புலத்தில் நிம்மதியும்
பூகோளத்தில் அமைதியும்

சோகங்கள் விட்டு
சொந்தங்கள் சேர்ந்து
சொல்பேச்சு கேட்டு
சொர்க்க பூமியாக்கி

பெற்றவரை மதித்து
பேராண்பை பூண்டு
பெண்ணடிமை தகர்த்து
பிறப்பில் பேதமற்று

மரங்களை நாட்டி
மற்றான் நலம்பேணி
மதவெறி அகற்றி
மனிதநேயம் காத்து

புத்தாண்டே நீ
புலர்ந்து வா
புன்னகை மலராய்
பூத்துக்குலுங்க வா..

Jeba Sri
Author: Jeba Sri

ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

Continue reading