தூசோடு மாசும்

ராணி சம்பந்தர்

தூசுடன் போர் புரிந்த போட்டியில்
நாசு அடைத்து மூசுகின்ற மூக்கும்
பேசும் மொழி, குரலுமே வராது
பசை போல் ஒட்டி ஒட்டியே முட்டிய
கண்ணீர் வடிந்து வடிந்தும் ஓடுமே

மாசு படிந்தத புவியின் போராலே
காற்றலையில் காவி பிடித்த கறை
முறையாகப் போராடிக் களைத்ததே
பறை சாற்றும் எரிமலைப் பாறையே
உறைந்துருகிய நெருப்புக் குழம்பே

பூசி மெழுகியே ஊர் ஊராகப் பரவிட
தூசியும் மாசாகப் பறந்து வந்திடவே
மூசி மூசி வசிக்கும் மானிடர் மூழ்கிய
நோயில் புலம்பலோடு புலம்பலாகுதே .

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் வரலாறு பலபாகம் வழிகூறும் பலகாலம் தமிழ்ப்பள்ளி உருவாக்கம் தரணிக்கே தனிமகுடம் உறவுகள் ஓன்றாகும் உயிர்ப்பு மொழி தமிழாகும் அடுத்த தலைமுறையும்...

Continue reading