கனவுப் பயணம்

சக்தி சிறினிசங்கர் விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம் வழிநெடுக வயல்வெளிகள் வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து கண்களைக்...

Continue reading

கனவுப்பயணம்……

ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026 கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து எண்ணங்களின்...

Continue reading

மே தினம் மேதினி வரம்..!!

சிவதர்சனி இராகவன்🙏
வியாழன் கவி 2141..!!

மே தினம் மேதினி வரம்..

மேதினி மேன்மையுறும்
மேதினமே வந்ததின்று
கூன் நிமிர்த்திக் குவலயம்
குதூகலிக்க வந்தது இத்தினம்
உழைப்பவர் வர்க்கம் உயர
தழைத்தவர் வாழ்வு சிறக்க
வரமென உதித்ததோ ஈங்கு
வரவென வந்ததே சிறப்பு..

ஊதியம் தன்னில் நேர்மை
மேதினி உணர்ந்தால் சீர்மை
வியர்வை மணிகளின் வீழ்கை
விருப்பொடு எழுவது மேன்மை
கரங்களில் கொண்டது உரமே
காத்திரம் கொள்வது மனமே
உண்டியும் செழிக்க உழவன்
ஊன்றுவான் காலை சேற்றுள்..

பிறப்புக்கும் இறப்புக்கும்
பெறுமதியாய் உழைப்பு
பேதமை இன்றுயே உயர்த்தும்
அரு மருந்து அதை அருந்து
உடல் வருத்து உனை உயர்த்து
இரப்பது சிறப்பல்ல ஈகைக்
குணமதை வளர்த்திடு வாழ்ந்திடு..
சிவதர்சனி இராகவன்
1/5/2025

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading