10
Sep
இரா.விஜயகௌரி
ஓடி ஓடி உழைத்த கால்கள்
உருக்குலைந்து போன தேகம்
பார்வை மங்கிய ஒளியிழந்த விழிகள்
சுருக்கம் போர்த்திய...
10
Sep
கன்றுக்குட்டி
இல 95
கன்றுக்குட்டி
துள்ளிக் குதிக்கும் கால்கள்
மழலை பேசும் கண்கள்...
10
Sep
எதுவும் உனக்கு இல்லை
கவிதை 816
என்னுடையது என்னுடையது என்று சொன்னாயே
பிறக்கும்போதும் கொண்டுவரவில்லை
இறக்கும் போதும் கொண்டுசெல்வதுமில்லை...
மே தினம் மேதினி வரம்..!!
சிவதர்சனி இராகவன்🙏
வியாழன் கவி 2141..!!
மே தினம் மேதினி வரம்..
மேதினி மேன்மையுறும்
மேதினமே வந்ததின்று
கூன் நிமிர்த்திக் குவலயம்
குதூகலிக்க வந்தது இத்தினம்
உழைப்பவர் வர்க்கம் உயர
தழைத்தவர் வாழ்வு சிறக்க
வரமென உதித்ததோ ஈங்கு
வரவென வந்ததே சிறப்பு..
ஊதியம் தன்னில் நேர்மை
மேதினி உணர்ந்தால் சீர்மை
வியர்வை மணிகளின் வீழ்கை
விருப்பொடு எழுவது மேன்மை
கரங்களில் கொண்டது உரமே
காத்திரம் கொள்வது மனமே
உண்டியும் செழிக்க உழவன்
ஊன்றுவான் காலை சேற்றுள்..
பிறப்புக்கும் இறப்புக்கும்
பெறுமதியாய் உழைப்பு
பேதமை இன்றுயே உயர்த்தும்
அரு மருந்து அதை அருந்து
உடல் வருத்து உனை உயர்த்து
இரப்பது சிறப்பல்ல ஈகைக்
குணமதை வளர்த்திடு வாழ்ந்திடு..
சிவதர்சனி இராகவன்
1/5/2025
Author: Nada Mohan
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...
30
Aug
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-09-2025
வாழ்க்கைப் பயணத்தில்
வண்ணமாய் குதூகலம்
நொடிப் பொழுதினிலே
நெஞ்சினை மகிழ்விக்கும்
குயிலின் பாட்டினிலே
கடலின்...
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...