” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

மே தினம் மேதினி வரம்..!!

சிவதர்சனி இராகவன்🙏
வியாழன் கவி 2141..!!

மே தினம் மேதினி வரம்..

மேதினி மேன்மையுறும்
மேதினமே வந்ததின்று
கூன் நிமிர்த்திக் குவலயம்
குதூகலிக்க வந்தது இத்தினம்
உழைப்பவர் வர்க்கம் உயர
தழைத்தவர் வாழ்வு சிறக்க
வரமென உதித்ததோ ஈங்கு
வரவென வந்ததே சிறப்பு..

ஊதியம் தன்னில் நேர்மை
மேதினி உணர்ந்தால் சீர்மை
வியர்வை மணிகளின் வீழ்கை
விருப்பொடு எழுவது மேன்மை
கரங்களில் கொண்டது உரமே
காத்திரம் கொள்வது மனமே
உண்டியும் செழிக்க உழவன்
ஊன்றுவான் காலை சேற்றுள்..

பிறப்புக்கும் இறப்புக்கும்
பெறுமதியாய் உழைப்பு
பேதமை இன்றுயே உயர்த்தும்
அரு மருந்து அதை அருந்து
உடல் வருத்து உனை உயர்த்து
இரப்பது சிறப்பல்ல ஈகைக்
குணமதை வளர்த்திடு வாழ்ந்திடு..
சிவதர்சனி இராகவன்
1/5/2025

Nada Mohan
Author: Nada Mohan