ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

பாசத்தின் பகிர்வினிலே (712)

செல்வி நித்தியானந்தன்
பாசத்தின் பகிர்வினிலே

காலமும் எமக்காய்
வாழ்ந்து
கண்ணிலே வலிகளை
சுமந்து
கடமைதனை திறம்பட
செய்து
நேர்த்தியும் பலதினை
செய்து
நெஞ்சிலே கனமும்
தாங்கியவர்

பணிகள் பலதும்
செய்து
பசியும் பலமுறை
மறந்து
உணவின் ருசிதனை
துறந்து
மகவுகள் உயர்வு
கண்டு
அகம் மகிழ்வில்
அலையாகி
கரைதனை அடைய
உரமானர்

பாசத்தை சமனாய்
பங்கிட்டு
பங்குவமாய் பலதை
கற்பித்து
பலருக்கும் உதவி
புரிந்திட்டு
புவியிலே பூரிப்பாய்
வாழ்ந்த
அன்னைக்கு பகிரவே
நிகருண்டோ

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading