பாசத்தின் பகிர்வினிலே (712)

செல்வி நித்தியானந்தன்
பாசத்தின் பகிர்வினிலே

காலமும் எமக்காய்
வாழ்ந்து
கண்ணிலே வலிகளை
சுமந்து
கடமைதனை திறம்பட
செய்து
நேர்த்தியும் பலதினை
செய்து
நெஞ்சிலே கனமும்
தாங்கியவர்

பணிகள் பலதும்
செய்து
பசியும் பலமுறை
மறந்து
உணவின் ருசிதனை
துறந்து
மகவுகள் உயர்வு
கண்டு
அகம் மகிழ்வில்
அலையாகி
கரைதனை அடைய
உரமானர்

பாசத்தை சமனாய்
பங்கிட்டு
பங்குவமாய் பலதை
கற்பித்து
பலருக்கும் உதவி
புரிந்திட்டு
புவியிலே பூரிப்பாய்
வாழ்ந்த
அன்னைக்கு பகிரவே
நிகருண்டோ

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading