மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

குமுதினி படுகொலை

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
15-05-2025

நமது தேசத்தின் இருண்ட நாளது
நாப்பது வருடம் ஓடி மறைந்தாலும்
நெஞ்சிலிருந்து அகலாத வலியிது
குமுதினி குருதியில் குழைந்த நாளது!

மாவிலியின் நெடுந்தீவு துறைமுகத்தில் உதிரத்தை உறைய வைத்த செய்தி
பசுந்தீவின் வாசிகளையும்
பச்சை மழலைகளையும் பரிதாபக் கதறலுடன்

குத்திப்படுகொலை குமுதினி படுகொலை
குதிரைகளும் பசுக்களும்
குமுறி மார்பிலடித்து கூக்குரலிட
கடலலை சிவந்து கண்ணீரில் நனைய.

பனைமரமும் தென்னைமரமும்
பரதவித்து கடலைப் பார்த்தழுத நாளிது.
பாவிகளாய் என்னூர் மக்கள்
பரிதவித்த அழுகுரல் எத்திசையும் இந்நாளிலே…15.05.1985.

Jeba Sri
Author: Jeba Sri

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading