இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

குமுதினி படுகொலை

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
15-05-2025

நமது தேசத்தின் இருண்ட நாளது
நாப்பது வருடம் ஓடி மறைந்தாலும்
நெஞ்சிலிருந்து அகலாத வலியிது
குமுதினி குருதியில் குழைந்த நாளது!

மாவிலியின் நெடுந்தீவு துறைமுகத்தில் உதிரத்தை உறைய வைத்த செய்தி
பசுந்தீவின் வாசிகளையும்
பச்சை மழலைகளையும் பரிதாபக் கதறலுடன்

குத்திப்படுகொலை குமுதினி படுகொலை
குதிரைகளும் பசுக்களும்
குமுறி மார்பிலடித்து கூக்குரலிட
கடலலை சிவந்து கண்ணீரில் நனைய.

பனைமரமும் தென்னைமரமும்
பரதவித்து கடலைப் பார்த்தழுத நாளிது.
பாவிகளாய் என்னூர் மக்கள்
பரிதவித்த அழுகுரல் எத்திசையும் இந்நாளிலே…15.05.1985.

Jeba Sri
Author: Jeba Sri

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading