” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

குமுதினி படுகொலை

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
15-05-2025

நமது தேசத்தின் இருண்ட நாளது
நாப்பது வருடம் ஓடி மறைந்தாலும்
நெஞ்சிலிருந்து அகலாத வலியிது
குமுதினி குருதியில் குழைந்த நாளது!

மாவிலியின் நெடுந்தீவு துறைமுகத்தில் உதிரத்தை உறைய வைத்த செய்தி
பசுந்தீவின் வாசிகளையும்
பச்சை மழலைகளையும் பரிதாபக் கதறலுடன்

குத்திப்படுகொலை குமுதினி படுகொலை
குதிரைகளும் பசுக்களும்
குமுறி மார்பிலடித்து கூக்குரலிட
கடலலை சிவந்து கண்ணீரில் நனைய.

பனைமரமும் தென்னைமரமும்
பரதவித்து கடலைப் பார்த்தழுத நாளிது.
பாவிகளாய் என்னூர் மக்கள்
பரிதவித்த அழுகுரல் எத்திசையும் இந்நாளிலே…15.05.1985.

Jeba Sri
Author: Jeba Sri