நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

குமுதினி படுகொலை

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
15-05-2025

நமது தேசத்தின் இருண்ட நாளது
நாப்பது வருடம் ஓடி மறைந்தாலும்
நெஞ்சிலிருந்து அகலாத வலியிது
குமுதினி குருதியில் குழைந்த நாளது!

மாவிலியின் நெடுந்தீவு துறைமுகத்தில் உதிரத்தை உறைய வைத்த செய்தி
பசுந்தீவின் வாசிகளையும்
பச்சை மழலைகளையும் பரிதாபக் கதறலுடன்

குத்திப்படுகொலை குமுதினி படுகொலை
குதிரைகளும் பசுக்களும்
குமுறி மார்பிலடித்து கூக்குரலிட
கடலலை சிவந்து கண்ணீரில் நனைய.

பனைமரமும் தென்னைமரமும்
பரதவித்து கடலைப் பார்த்தழுத நாளிது.
பாவிகளாய் என்னூர் மக்கள்
பரிதவித்த அழுகுரல் எத்திசையும் இந்நாளிலே…15.05.1985.

Jeba Sri
Author: Jeba Sri