Jeya Nadesan

தாய்க்கும் பிள்ளைக்கும் தலைவனார் தாயுமானவர் குடும்பத்தில் முதல் தலைவனாவர் உழைப்பால் மிகவும் உயர்ந்தவர் தந்தை எனும் உயர் மனிதரே பிள்ளைகளின்...

Continue reading

பள்ளிப்பருவத்திலே

ஜெயம் தங்கராஜா

ஆடிப்பாடி ஓடிவிளையாடிய பட்டாம்பூச்சி பருவம்
கூடிக் களிப்பில் குளித்தாரே எவரும்
பாடம் படிப்பு சோதனை இருந்தது
கூடவே குழப்படியும் நிழலாக திரிந்தது

மழைக்குள் நனைவதும் துளிகளை பிடிப்பதும்
மழைநிறைத்த கிணற்றிணை எட்டிப்பார்த்து இரசிப்பதும்
மசுக்குட்டி பயமின்றி பூவரசில் ஏறுவதும்
அதுப்பட்டு தடித்தாலும் மறுநாளும் ஏறுவதும்

பாடசாலை இறுதிமணி எப்போது அடிக்குமென
பாடங்களுள் கடைசியே அதிகமாய் பிடிக்குமென
அவ்வப்போது தண்டனைகள் கிடைத்தாலும் மறந்து
எப்போதும் போலவே சிறக்கடித்தே பறந்து

மூணு குஞ்சுக்களுடன் தாய்க்கோழியும் முத்தத்தில்
வானில் வட்டமிடும் பருந்தோ பித்ததித்தில்
முள்முருக்கை இலையினை கொக்கையால் ஒடித்து
செல்லக்குட்டி ஆட்டுக்கு படைப்பேனே விருந்து

Nada Mohan
Author: Nada Mohan