ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

என்னழகுச் சித்திரமே

நகுலா சிவநாதன்

என்னழகுச் சித்திரமே

சிங்காரப் பெண்ணவளே!
சிந்தனையின் கருவூலமே
மின்னல் விழியிரண்டும் மின்சாரம் பாய்ச்சுதடி
கன்னக் குழியிரண்டும் காந்தக் கருவிழியால்
என்னைக் கவருதடி ஏந்திழையே உன்னழகு

புத்தம் புதிய எண்ணங்கள்
புதிதாய் கூடி மலர்ந்திடவே
நித்தம் பூக்கும் மலர்களாக
நிறைவாய் முயற்சி பெருகிடுமே
முத்து வைர மணிகளாக
முகிழ்க்கும் நல்ல விளையாட்டும்
வித்தாய் வெற்றி பெற்றிடவே
விரைவாய் ஓடிய சித்திரமே!

நகுலா சிவநாதன்1809

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading