கடலலை

நகுலா சிவநாதன்

கடலலை

விடாமுயற்சி உன்னில் கண்டேன்
விந்தை உலகின் வியப்பு கண்டேன்
சிந்தைக்குள்ளே தெளிவு கண்டேன்
சிறப்பாய் வாழத் தெரிந்துகொண்டேன்

முயற்சி என்ற முனைப்பாலே
முயலும் உலக வாழ்வினிலே
அயற்சி யில்லா நிலைகளிலும்
அயரா உழைப்பு வேண்டுமே!

கடலைப்போலே முயன்றிடு நீ
கனிவாய் ஓடி உழைத்திடு நீ
வரவுக்குள்ளே செலவுண்டு
வண்ண வாழ்வை அமைத்திடுநீ

அலைபோல் எண்ணம் பரந்துவர
அமைதி என்றும் நிலைத்து நிற்க
சிலையாய் இறைவன் அருளினிலே
சிந்தை உலகை வென்றிடுநீ

நகுலா சிவநாதன் 1815

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading