ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

இசை

ஜெயம்

இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு புகழ்பாட இதைவிட்டால் எது
மறந்துவிட சோகத்தை மருந்தாக அது

பிணிதனை தீர்த்துவிட இதுவன்றோ அருமருந்து
தனிமையிலும் செவிகளுக்கு இனிமையான விருந்து
கல்மனத்தை கரைத்துவிடும் இசையொரு அற்புதம்
உள்ளத்தை உருக்கி உயிருக்குள் கலந்துவிடும்

தன்னை மறந்து பறவையாக பறப்பார்
உண்ணும் உணவாக ஒருநேரம் எடுப்பார்
இன்னிசை என்பது நிகழ்த்தும் அதிசயத்தை
மண்வாழ் உயிர்களெல்லாம் அடையும் அச்சுகத்தை

தெய்வத்தோடு இணைக்கும் இசையொரு மெய்மொழி
மெய்யான உவகையை உருவாக்கும் தேனொலி
இசைக்குள்ளே தொலைபவர்கள் நாளாந்தம் கோடி
இசைகேட்டால் போகாதே செடிகொடியும் வாடி

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading