ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

மரணித்தவனே மறுபடி வந்தால்..

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025

மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி முளைத்ததைக் கண்டாயா?

மரணித்தவனே அண்ணா..
மறுபடியும் வருவாயானால்
மனதில் கிடப்பவையை
மணிக்கணக்காய் பேசலாம்

நினைவுகளின் சுமை இறக்கி
நிகழ்காலக் கதை பேசி
விழிகளில் தேங்கிய நீரையும்
வீணான காலத்தையும் மறந்து

மாமன் சாயலென ஊரார் சொல்ல
மகனின் முகம் பார்க்க
மறுபடியும் பிறப்பெடுப்பாய்
மலைத்துத் தான் நீயும் நிற்பாய்!

மரணித்தவனே மறுபடியும் வந்தால்
மௌனத்தில் நிலைப்பனோ
மழையாய்க் கண்ணீர் கொட்டிடுமோ
மண்டியிட்டுக் கிடப்பனோ?…

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading