மரணித்தவனே மறுபடி வந்தால்..

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025

மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி முளைத்ததைக் கண்டாயா?

மரணித்தவனே அண்ணா..
மறுபடியும் வருவாயானால்
மனதில் கிடப்பவையை
மணிக்கணக்காய் பேசலாம்

நினைவுகளின் சுமை இறக்கி
நிகழ்காலக் கதை பேசி
விழிகளில் தேங்கிய நீரையும்
வீணான காலத்தையும் மறந்து

மாமன் சாயலென ஊரார் சொல்ல
மகனின் முகம் பார்க்க
மறுபடியும் பிறப்பெடுப்பாய்
மலைத்துத் தான் நீயும் நிற்பாய்!

மரணித்தவனே மறுபடியும் வந்தால்
மௌனத்தில் நிலைப்பனோ
மழையாய்க் கண்ணீர் கொட்டிடுமோ
மண்டியிட்டுக் கிடப்பனோ?…

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

Continue reading

செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

Continue reading