ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை

பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே

காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா சத்தமும்

பந்தலில் சர்பத்
பரிமாற பலரும்
வெய்யில் தாகம்
தண்ணீராய் தணித்தும்

வெளிநாடு உறவுகள்
வெயிலை தாங்காது
வெந்த கால்கள்
நடக்கமுடியாது நிழலை
தேடி ஓடினரே
செல்வி நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading