“பாருலகம்”

நேவிஸ் பிலிப் கவி இல(473)

பாருலகே !!நீ இன்று
ஏனிந்தக் கோலம் கொண்டாய் .??
எங்கும் எதிலும் புதுமை பொலிந்து
பொங்கும் பூம்புனலாய்

இயற்கை வளங்கள் செழித்தோங்க
தேசம் ஞானம் கல்வி
ஈசன் பூசையென
ஒன்றே குலமென நிலத்திருந்தாய்

எத்தனையோ காலச்சுவடிகள்
கண்டோம் உந்தன் பரப்பினிலே
விரல் நுனியில் உலகம் சுருக்கி
விந்தைகள்புரிந்த வேளையிலே

விஞ்ஞான மோகத்திலே
மெஞ்ஞானம் மறந்த மானிடரின் வன்மம்
யுத்தக்களத்தினிலே பொலிந்தவை
அத்தனையும் சிதைந்து போக

கோபம் கொண்ட இயற்கையன்னை
சீற்றம் கொண்டெழுகின்றாள்
ஆழிப் பேரலையாய் பூகம்பமாய்
காட்டாற்று வெள்ளமாய்..மாறிடுமோ
இந்த அவல நிலை???

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

Continue reading

செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

Continue reading