நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

“பாருலகம்”

நேவிஸ் பிலிப் கவி இல(473)

பாருலகே !!நீ இன்று
ஏனிந்தக் கோலம் கொண்டாய் .??
எங்கும் எதிலும் புதுமை பொலிந்து
பொங்கும் பூம்புனலாய்

இயற்கை வளங்கள் செழித்தோங்க
தேசம் ஞானம் கல்வி
ஈசன் பூசையென
ஒன்றே குலமென நிலத்திருந்தாய்

எத்தனையோ காலச்சுவடிகள்
கண்டோம் உந்தன் பரப்பினிலே
விரல் நுனியில் உலகம் சுருக்கி
விந்தைகள்புரிந்த வேளையிலே

விஞ்ஞான மோகத்திலே
மெஞ்ஞானம் மறந்த மானிடரின் வன்மம்
யுத்தக்களத்தினிலே பொலிந்தவை
அத்தனையும் சிதைந்து போக

கோபம் கொண்ட இயற்கையன்னை
சீற்றம் கொண்டெழுகின்றாள்
ஆழிப் பேரலையாய் பூகம்பமாய்
காட்டாற்று வெள்ளமாய்..மாறிடுமோ
இந்த அவல நிலை???

Nada Mohan
Author: Nada Mohan