அகத்தினில் இன்பமே

செல்வி நித்தியானந்தன் அகத்தினில் இன்பமே ஆறுவார விடுமுறை ஓடியே சென்றதே ஆளுமை குறைந்து முடங்கிகே போனதே தாயகம் என்றதும் தனக்குள்ளே மகிழ்ச்சி தன்இயல்பு மறந்து தள்ளாடும்...

Continue reading

“அது ஒரு கனாக் காலம்”

நேவிஸ்பிலிப் கவி இல(477)

சின்னஞ்சிறு வயதினிலே
சித்திரமாய் நினைவினிலே
வாழ்க்கையின் சுகந்தமெல்லாம்
வர்ணக் கனவுகளின் கலவையிலே

அந்த நாளை நினைச்சாலே
எடுப்பாத்தான் எனக்கிருக்கு
கடலலையின் தாலாட்டுடன்
ஆலய மணி ஒசை
ஊரையே உசுப்பி விடும்

காலங்காத்தால
வெள்ளெனதான் விழித்தெழுந்து
பனங்காணி நடந்து சென்று
பனம்பழம் பொறுக்கியதும்

மழைக்காலம் வந்தாலே
விரைந்தோடி காட்டுக்குள்ளே
நாவல் பழம் துவரம் பழம்
துவடிப் பழம் காரப்பழம்
பறித்துண்ட ஞாபகமும்

என்னோட தம்பி தங்கை
என் வயது தோழியரும்
சுற்றத்து குட்டிகளும்கூடி
கூட்டான் சோறு சமைத்ததும்
அதெல்லாம் கனாக் காலமாய்

கிராமத்து வனப்பு எல்லாம்
கனவில் கண்ட காட்சியாய்
நாகரீக நாட்டத்திலே
மங்கியே மறைஞ்சு போச்சு..
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

Continue reading