முயற்சி தரும் பயிற்சி 774

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

முயற்சி தரும் பயிற்சி

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

“அது ஒரு கனாக் காலம்”

நேவிஸ்பிலிப் கவி இல(477)

சின்னஞ்சிறு வயதினிலே
சித்திரமாய் நினைவினிலே
வாழ்க்கையின் சுகந்தமெல்லாம்
வர்ணக் கனவுகளின் கலவையிலே

அந்த நாளை நினைச்சாலே
எடுப்பாத்தான் எனக்கிருக்கு
கடலலையின் தாலாட்டுடன்
ஆலய மணி ஒசை
ஊரையே உசுப்பி விடும்

காலங்காத்தால
வெள்ளெனதான் விழித்தெழுந்து
பனங்காணி நடந்து சென்று
பனம்பழம் பொறுக்கியதும்

மழைக்காலம் வந்தாலே
விரைந்தோடி காட்டுக்குள்ளே
நாவல் பழம் துவரம் பழம்
துவடிப் பழம் காரப்பழம்
பறித்துண்ட ஞாபகமும்

என்னோட தம்பி தங்கை
என் வயது தோழியரும்
சுற்றத்து குட்டிகளும்கூடி
கூட்டான் சோறு சமைத்ததும்
அதெல்லாம் கனாக் காலமாய்

கிராமத்து வனப்பு எல்லாம்
கனவில் கண்ட காட்சியாய்
நாகரீக நாட்டத்திலே
மங்கியே மறைஞ்சு போச்சு..
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading