அகத்தினில் இன்பமே

செல்வி நித்தியானந்தன் அகத்தினில் இன்பமே ஆறுவார விடுமுறை ஓடியே சென்றதே ஆளுமை குறைந்து முடங்கிகே போனதே தாயகம் என்றதும் தனக்குள்ளே மகிழ்ச்சி தன்இயல்பு மறந்து தள்ளாடும்...

Continue reading

அது. ஒரு கனாக்காலம்

இரா.விஜயகௌரி
விழிக்குள் மொழி பேசி
வியந்து தினம் மலர்ந்து
மலருக்குள் இதழாய் நின்று
மகிழ்ந்தெழுந்த பொற்காலம்

பதின்ம வயதெழுதி எங்கள்
பழகும் உறவிழைந்து -தினம்
தென்றலின் சிறகசைக்க விரிந்த
தெவிட்டாத கற்காலம்

துன்பத்தின் பேரலையை -நாம்
தூர எறிந்து வந்தோம்
வனப்பின் தெறிப்பறிந்து
வண்ணத்துப் பூச்சியானோம்

துள்ளி. மனம் மகிழ்ந்து
புள்ளி மான் கூட்டங்களாய் அன்று
கள்ளம் கபடமற்ற அந்த
காவியத்தின் எழில் பருவம்

ஆம் வாழ்வின் சிறு பருவம்
வனப்பின் எழில் தொடுகை
எதையும் முடித்தே வெல்லும் -அது
ஓர் கனவின் காலமென்பேன்

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

Continue reading