அது ஒரு கனாக்காலம்

ராணி சம்பந்தர்

மகிழ்வான பிறந்த மண்
சொந்த பந்தம் சூழ்ந்து
வாழ்ந்து வந்த இனிமைக்
காலம் பட்டுப் பூச்சியாய்
சிறகடித்துப் பறந்த காலம்

தனிமை நினைவேயன்றிய
கனிவு மொழி பேசி மகிழ்வு
ஊட்டும் கூட்டுக்குடும்ப
உறுப்பினர் காட்டிய பரிவில்
குதூகலித்த காலமது

கோடி இன்பந் தந்திடும்
அன்னையின் மடியில்
தூங்கிடவே கதை சொல்லி
மனம் நிறைந்த மறக்கவே
முடியாத பதிவுக் காலமது

அக்காமார் சமைத்துத் தர
தந்தை தான் உண்ண முதல்
ஒரு பிடி எனக்கு ஊட்டி விட்டுத்
தந்த அந்தப் பாச ருசி இன்றும்
நாவூற நினைக்கும் காலமது

அண்ணன்மார் தூக்கி உப்பு
மூட்டை காவியதும் அது ஒரு
கனாக்காலம்

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

Continue reading

செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

Continue reading