அகத்தினில் இன்பமே

செல்வி நித்தியானந்தன் அகத்தினில் இன்பமே ஆறுவார விடுமுறை ஓடியே சென்றதே ஆளுமை குறைந்து முடங்கிகே போனதே தாயகம் என்றதும் தனக்குள்ளே மகிழ்ச்சி தன்இயல்பு மறந்து தள்ளாடும்...

Continue reading

அது ஒரு கனாக்காலம்

ராணி சம்பந்தர்

மகிழ்வான பிறந்த மண்
சொந்த பந்தம் சூழ்ந்து
வாழ்ந்து வந்த இனிமைக்
காலம் பட்டுப் பூச்சியாய்
சிறகடித்துப் பறந்த காலம்

தனிமை நினைவேயன்றிய
கனிவு மொழி பேசி மகிழ்வு
ஊட்டும் கூட்டுக்குடும்ப
உறுப்பினர் காட்டிய பரிவில்
குதூகலித்த காலமது

கோடி இன்பந் தந்திடும்
அன்னையின் மடியில்
தூங்கிடவே கதை சொல்லி
மனம் நிறைந்த மறக்கவே
முடியாத பதிவுக் காலமது

அக்காமார் சமைத்துத் தர
தந்தை தான் உண்ண முதல்
ஒரு பிடி எனக்கு ஊட்டி விட்டுத்
தந்த அந்தப் பாச ருசி இன்றும்
நாவூற நினைக்கும் காலமது

அண்ணன்மார் தூக்கி உப்பு
மூட்டை காவியதும் அது ஒரு
கனாக்காலம்

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

Continue reading