சிறு வயதில்

ஜெயம் தங்கராஜா

பெத்தவரின் அருகினிலே வளர்ந்திட்ட பருவம்
சுத்தமான மனத்தை காவித்திரிந்த உருவம்
கற்றுக்கொண்டே பாசத்தை உருண்டிட்ட உலகு
பெற்றுக்கொண்ட நேசத்திற்கோ இல்லையொரு அளவு

புன்னகை என்பதோ அப்பழுக்கற்று இருக்கும்
எண்ணில்லா ஆனந்தத்தை உள்ளமும் பெருக்கும்
சின்ன மனிதர்களின் அழகான உலகம்
உண்மையான உணர்வதனால் இல்லையொரு கலகம்

பாடசாலை பாடங்களை பதிந்திடவே படித்து
ஆடல் பாடலுடன் விளையாடி ஓடிப்பிடித்து
அப்பாவித்தனமாக அப்போதைய சிறுபராய நிகழ்வு
இப்போதும் மீட்டெடுத்து அசைபோடுகையில் மகிழ்வு

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading