ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

சிறு வயதில்

ஜெயம் தங்கராஜா

பெத்தவரின் அருகினிலே வளர்ந்திட்ட பருவம்
சுத்தமான மனத்தை காவித்திரிந்த உருவம்
கற்றுக்கொண்டே பாசத்தை உருண்டிட்ட உலகு
பெற்றுக்கொண்ட நேசத்திற்கோ இல்லையொரு அளவு

புன்னகை என்பதோ அப்பழுக்கற்று இருக்கும்
எண்ணில்லா ஆனந்தத்தை உள்ளமும் பெருக்கும்
சின்ன மனிதர்களின் அழகான உலகம்
உண்மையான உணர்வதனால் இல்லையொரு கலகம்

பாடசாலை பாடங்களை பதிந்திடவே படித்து
ஆடல் பாடலுடன் விளையாடி ஓடிப்பிடித்து
அப்பாவித்தனமாக அப்போதைய சிறுபராய நிகழ்வு
இப்போதும் மீட்டெடுத்து அசைபோடுகையில் மகிழ்வு

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading